Tuesday, May 31, 2011

போதைவஸ்துப் பாவனையும் இலங்கை முஸ்லிம்களும்

Best Blogger Tips
சில கள ஆய்வுக் குறிப்புகள்
இலங்கையில் 1979க்குப் பிறகு அறிமுகமான திறந்த போருளாதாரக் கொள் கையின் விளைவாக கொழும்பின் நகர வாழ்க்கை வேகமாக மாறி வருகின் றது. அதீத நகரமயமாக்கப்பட்ட சமூக அமைப்பில் போதைவஸ்துப் பாவனை பெரியளவிலான நெருக்கடிகளை உருவாக்குகின்றது. இலங்கையின் மொத்த சிறைக்கைதிகளில் 40%க்கும் அதிகமானோர் போதைவஸ்துக்களுடன் தொடர் பானவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் பொதுவாக இலங்கையிலும் குறிப்பாக கொழும்பிலும் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 15 வகையான பிரபல்யமான போதைவஸ்துக்கள் பாவனையில் உள்ளபோதும் இலங்கையில் குறிப்பாக கொழும்பு இளைஞர்களிடையே ஹெரோயின் முதலிடத்தில் உள்ளது.
ஹெரோயின் போதைவஸ்திலும் பல்வேறு தரங்கள் உள்ளன. மூன்றாம் தர ஹெரோயினே கொழும்பு இளைஞர்களால் பெரிதும் பாவிக்கப்படுகின்றது. பொலிஸ் போதை தடுப்புப் பணியகம் (Police Narcotic Bureau) வின் முன்னாள் பணிப்பாளர் பூஜித ஜயசுந்தர கொழும்பு இளைஞர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் தந்தார்.

சினிமா பார்ப்பது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன?

Best Blogger Tips

சினிமாநாடகங்கள் இவை போன்றவைகளை பார்ப்பது தொடர் பான இஸ் லாமிய நிலைப்பாடு என்ன என்பதை பலர் கேட்டுக் கொண் டிருக்கின்றனர். இவற்றை ஒரு முஸ்லிம் பார்க்கச் செல்வது கூடுமா?அல்லது ஹராமாகுமா என்றும் கேட்கின் றனர்.
எவ்வித சந்தேகமுமின்றி சினி மாவும் அதனைப்போன்ற ஊட கங்களும் ஏனைய பொருட்களைப் போன்றே அதன் பயன் பாட்டைப் பொருத்து ஹராமா அல்லது ஹலாலா என தீர்மா னிக்கப்படுகின்றது. அதனை நன் மையான வழியில் பயன்படுத்தினால் அடிப்படையில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அதற்கான தீர்ப்பு ஏனைய விடயங்களைப் போன்றே அமையும். ஆனால்அதனை தீய வழியில் பயன்படுத்தினால் அது ஹராமானதாக அமைந்து விடும்

இணையத்தளம் மூலம் ஆணும் பெண்ணும் உரையாடலாமா?

Best Blogger Tips

ஆணும் பெண்ணும் இன்டர்நெட் மூலமாக வரையறைகளைப் பேணி உரை யாடலாமா? (CHAT)

அல்லாஹுத்தஆலா ஷைத்தானின் சுவடுகளை பின்பற்றுவதை தடை செய்துள்ளான் என்பதை நாம் அறிந்ததே. ஹராத்தில் விழக் கூடியஹராத் திற்கு இட்டுச் செல்லக்கூடிய அனைத்தும் தடுக் கப்பட்டுள்ளது. சிலவேளைஅதன் அடிப்படை ஆகுமாக இருந்தாலும்கூட. இதனை உல மாக்கள் தீமை யைத் தடுப்பதற் கான அடிப்படை என கூறுகின்றனர்.

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி உயிர் வாழும் ஓர் அறிவுப் பாரம்பரியம்

Best Blogger Tips

கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி இந்நூற்றாண்டின் மிகப்பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர். இஸ்லாமிய தஃவா களத்தில் முன்னணியில் நிற்கும் தன்னிகரற்ற ஆளுமை.
தான் வாழும் சமூகம் குறித்து ஆழ்ந்த அனுபவமும் கூர்ந்த பார்வையும் மிகுந்தவர். இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் அடியா ழம் வரை சென்று சமகாலத் தேவைகளுக் கேற்ப சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர். எதையும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை (அஸாலா) வழிநின்று அதேவேளை சமகாலத்தின் செல்நெறிகளை (முஆஸிரா) கருத்திற் கொண்டு நோக்குபவர். இதனால் சட்டப் பகுதியில் முஜ்தஹிதுல் முத்லக் என்ற அந்தஸ்தை எட்டியவர்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக பேனை முனையில் போராடி வரும் கர்ளாவிநூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவரது பேச்சும் பிரச்சார மும் எழுத்தும் அரபுலகோடு சுருங்கவில்லை. தமது அடையாள நெருக் கடிக்கு(Identity Crisis) முகங்கொடுத்துஇஸ்லாமிய பண்பாட்டை பேணுவதில் போராடிக் கொண்டிருக்கும் ஐரோப்பியஅமெரிக்க முஸ்லிம்களை நோக்கி யும் அவரது சிந்தனைகள் நீண்டன.
இஸ்லாம் எல்லா காலத்திற்கு முரிய தெய்வீகத் தூது. அது ஒரு வாழும் கொள்கைநடைமுறைச் சாத்தியமான வாழ்க்கைத் திட்டம். காலவர்த்தமானதேசிய எல்லைகளைத் தாண்டி எப்போதும் இளமையாய் வாழும் சிந்தனை. இதுதான் கர்ளாவியின் ஒட்டு மொத்த பிரச்சாரத்தினதும் அடி நாதம்.
அல்-அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இணைந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த கர்ளாவி கல்வி அடைவுகளில் எப்போதும் முன்னணி யிலேயே நின்றார். உயர்தரப் பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். பின்னர் அல்-அஸ்ஹர் உஸூலுத்தீன் பீடத்தில் சேர்ந்து 1953ல் 180 பட்டதாரி மாணவர் களுள் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.
1957ல் மொழித்துறை மற்றும் இலக்கியத்துக்கான உயர் கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1960ல் உஸூலுத்தீன்  பீடத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறைகளில் முதுகலைக் குச் சமனான உயர்கல்விச் சான் றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக 1973ல் "ஸகாத்தும் சமூகப் பிரச்சினை யைத் தீர்ப் பதில் அதன் பங்கும்" என்ற தலைப்பில் தனது கலாநிதிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தார்.
யூஸுப் அல் கர்ளாவி பள்ளி வாசல் ஒன்றின் கதீபாக சிறிது காலம் பணி யாற்றிய பின்னர் எகிப்திய வக்ப் அமைச்சின் கீழுள்ள இமாம்களுக் கான கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயலாற்றினார். அதனைத் தொடர்ந்து அல்-அஸ்ஹரின் வெளியீட்டு முயற்சிகளை மேற்பார்வை செய்யும் தஃவா செயல கத்தில் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1961ல் கட்டார் மார்க்கக் கல்வி நிறுவனத்தின் தலைவரானார். 1973 வரை அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் அயராது உழைத்தார். 1973ல் கட்டார் பல்கலைக்கழகத்தில் ஷரீ ஆத் துறையை நிறுவி அதனை வளர்த்தெடுக்கும் பொறுப்பையும் ஏற்றார். 1981 முதல் 1999 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார்.
கட்டார் பல்கலைக்கழகத்தில் 1999ல் சுன்னா மற்றும் ஸீறா ஆய்வு நிலை யத்தை நிறுவி இன்று வரை அதன் பணிப்பாளராக உழைத்து வருகின்றார். கலாநிதி கர்ளாவி இஸ்லாமிய கல்விக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். பிரச்சாரப் பணிக்காக நவீனகால தஃவா உத்திகளையும் சாதனங்களையும் நன்கு கையாண்டு தனது பேச்சாலும் எழுத்தாலும் அரை நூற் றாண்டுக்கு மேல் போராடி வருவர். தற்போது ஐரோப்பிய சிறுபான்மை முஸ்லிம்களின் சிந்தனை ஒருமைப்பாட்டையும் இஸ்லாமிய அடையாளத் தையும் நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆய்வுக்கும் பத்வாவுக் குமான ஐரோப்பிய சபையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
மக்காவிலுள்ள றாபிததுல் ஆலமில் இஸ்லாமியின் கீழ் இயங்கும் சட்டமன் றத்திலும் (மஜ்மஉல் பிக்ஹி) ஜோர்தானிலுள்ள இஸ்லாமிய நாகரிகத்துக் கும் ஆய்வுக்குமான மன்றத்திலும் இஸ்லாமிய உலகில் பல்வேறு பிக்ஹ் துறை ஆய்வு நிலையங்களிலும் தஃவா இயக்கங்களிலும் அங்கம் வகித்து வருகின் றார். இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் மட்டுமன்றி சமூக நலன் புரிப் பணிகள்இலக்கிய ஆய்வுகள் என கலாநிதி கர்ளாவியின் பங்கு விரிந்து செல்கின்றது. ˆOxford இலுள்ள இஸ்லாமிய ஆய்வு நிலையத்திலும் இஸ்லா மாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக செயற்குழுவிலும் அவர் அங் கம் வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது முஸ்லிம் அறிஞர் களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகப் (JUMS) பணியாற்றுகின்றார்.
16 வயது முதலே தனது கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு மார்க்கப் பிரச்சார உரைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்தார். 19வது வயதில் இஃவா னுல் முஸ்லிமூன் இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இமாம் ஹஸனுல் பன்னாவின் ஆன்மீகப் பாசறையில் வளர்ந்த நவீனகால இஸ்லாமிய அறிஞர்களில் கலாநிதி கர்ளாவியும் ஒருவர். இஹ்வான்களின் இரண்டாவது பொது வழி காட்டியாக இருந்த இமாம் ஹஸன் ஹுழைபியின் பணிப்பின் பேரில் எகிப்தின் அலெக் ஸாந்திரியா முதல் உஸ்வான்சினாய்ப் பாலைவரை அவர் தஃவா பயணங்களில் ஈடுபட்டார். இதனால் சிரியாஜோர் தான்லெபனான் போன்ற நாடுகளிலும் கர்ளாவியின் கருத்துக்களும் சிந்தனை களும் பெரும் செல்வாக்கைப் பெறலானது. இதனால் அவர் அறபு ஆட்சியா ளர்களின் கொடுமைகளுக்கு ஆளாகியதோடு பலமுறை இருண்ட சிறைகளி லும் தள்ளப்பட்டார். 1941, 1954, 1967, 1973 போன்ற ஆண்டுகள் அவரது வாழ்வில் மிகவும் துயரம் மிகுந்தவை. இந்த ஆண்டுகளில் அவர் பல மாதங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழிக்க வேண்டியிருந்தது.
மஸ்ஜித்களின் குத்பா மிம்பர்களை மட்டுமன்றி நவீன வெகுசன தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக அவர் பயன்படுத்துகின்றார். மாநாடுகள்கருத்தரங்குகள்விரிவுரைகள்ஐரோப்பிய நாடுகளில் நடாத் தப்படும் விஷேட கலந்துரையாடல்கள்பல்கலைக்கழகங்கள்என கர்ளாவி யின் தஃவாக் களம் விரிந்த எல்லை கொண்டது.
அஷ்ஷெய்க் அல்லாமா கர்ளாவியின் தஃவா உத்திகள் முற்றிலும் நவீன தஃவா முறையியலைத் தழுவியதொன்றாகும். சமகாலத்தில் தஃவாவின் அடிப்படைகள் தஃவா முறையியல் (பிக்ஹுத் தஃவா) என்னும் தனிப்பெரும் கலையாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய பிக்ஹுத் தஃவாவை செம்மை யான ஒரு தனிக் கலையாக வளர்த் தெடுத்ததில் கர்ளாவியின் சிந்தனைக் கும் கருத்துகளுக்கும் ஒரு காத்திரமான பங்கிருக்கின்றது என்பதை இலகு வில் புறக்கணிக்க முடியாது.
அழைப்பாளனின் அறிவுப் பின்னணிகோளாறு எங்கேஇஸ்லாமி இயக்கங்கள் முதன் மைப்படுத்த வேண்டியவை போன்ற நூல்கள் நவீன இஸ்லாமிய இயக்கங்களையும் இஸ்லாமிய எழுச்சியையும் வழிநடாத்து வதில் எழுதப் பட்ட முக்கிய நூல்கள் எனலாம். கர்ளாவியின் உணர்ச்சிபூர்வமான உரைகள் உறங்கும் உள்ளங்களை உலுப்பி விடும் தன்மை வாய்ந்தவை. அவரது மிம்பர் பிரசங்கம் கேட்பவர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. தீவிரவாதத்தை நிராகரிக்கும் இவர் எப்போதும் நடுநிலையான போக்கைக் கொண்டவர்.
கர்ளாவி 100க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார் இவரது நூல்கள் இஸ்லாமிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அவற்றுள் சில பத் துக்கு மேற்பட்ட தடவைகள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. கணிசமானவை ஆங்கிலம்,பிரெஞ்சுஉருதுபோன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. கலாநிதி கர்ளாவி ஆயிரக்கணக் கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள தோடு விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். இஸ்லாமிய உலகில் இவர் ஓர் அரிய எழுத்தாளர். இவரைப் போன்று எழுதியவர்கள் மிகவும் சொற்பமானவர் களே.
சமகாலத்தின் தேவைகளுக் கும் ஷரீஆவின் நெகிழ்வுகளுக்கு மிடையில் ஒர் அற்புதமான சமநிலையை அவர் பேணியுள்ளார். எந்த கருத்தாழ மிக்க சிந்தனையையும் எளிய மொழிநடையில் முன்வைப்பது இவரது எழுத்தின் சிறப்பம்சம் எனலாம். ஒரு அழைப்பாளனின் உத்வேகமும் சட்ட அறிஞரின் நுணுக்கமும் சீர்திருத்தவாதியின் விரிந்த பார்வையும் இவர் எழுத்துக்களில் சம விகிதத்தில் இழையோடுவதைக் காணலாம்.
பொருளாதாரம்அரசியல்சட்டம்சமூகம்அகீதாவரலாறுதப்ஸீர்ஹதீஸ்பிக்ஹுத் தஃவாகல்விஇலக்கியம் என
எல்லாத் துறைகளிலும் பல்வேறு நூல்களை அவர் எழுதிப் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளார். சில பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக கற்பிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது.
கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி உஸூலுத்தீன் துறையைச் சார்ந்த அகீதாதப்ஸீர் ஆகிய பகுதிகளி லேயே தனது கல்வியைப் பூர்த்தி செய்தவர். இத் துறையில் கல்வி கற்ற அவரால் எவ்வாறு மிகப் பெரும் சட்ட மேதை யொன்றாக மாற முடிந்தது. இதுவொரு சுவாரஸ்யமான விடயம். உண்மை யில் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி பள்ளிவாயலில் கதீபாகப் பணியாற்றிய காலத்திலும் தாயியாகப் பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்த காலத்திலும் அவரிடம் பிக்ஹு சார்ந்த பிரச்சினைகளை முன் வைத்தே மக்கள் விளக்கம் கேட்டனர். தான் சென்ற இடங்களிலெல்லாம் மக்களிடமிருந்து வந்த சட்டப் பிரச்சினைகளே கர்ளாவியை மிகப் பெரும் சட்ட அறிஞராக மாற்றியது.
இவ்வகையில் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களைப் பற்றியும் மத்ஹப் களைப் பற்றியும் அவர் விரிவாக ஆராய்ந்ததன் விளைவாக ஒரு முஜ்தஹித் என்ற அறிஞனின் அளவிற்கு புலமைப் பெற்றார். சட்டத்துறையில் ஒரு வர் பெற முடியுமான கடைசி நிலை இதுவே.
கர்ளாவி எல்லா மத்ஹபுகளின் சட்டம் வகுக்கும் ஒழுங்குகளையும் ஆராய்ந் துள்ள போதும் அவர் ஒரு தனித்தசுதந்திர சிந்தனையாளராகவே விளங்கு கின்றார். கர்ளாவி பிறந்த கிராமம் ஷாபி மத்ஹபை பின்பற்றும் பிரதேசம். இவர் மிக ஆழமாக கற்றது ஹனபி மத்ஹபின் சட்ட மரபுகளையே. எனினும் அவர் மத்ஹப்களிலேயே முற்று முழுதாகத் தங்கியிருக்கும் குறுகிய சிந்த னைக்கு அப்பால் பிக்ஹை காலத்தின் தேவைக்கேற்ப முன் வைக்கும் அபார திறமையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறார்.
இஜ்திஹாத் பணியைப் பொறுத்தவரை மத்ஹப் மரபுகளிலிருந்து விலகி சுதந்திரமாக குர்ஆனையும் சுன்னாவையும் ஆராய்கின்ற அதேவேளை மத்ஹ பிலிருந்து காலத்திற்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் போக்கை யும் அவர் பின்பற்றுகின்றார். சமகாலசமூக-அரசியல்பொருளாதார மாற்றங் களால் நேர்ந்த பிரச்சினைகளை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டு அதற் கான தீர்வுகளை இஸ்லாதின் மூலாதாரமான குர்ஆனிலும் சுன்னாவிலும் தேட முயல்வதுதான் இவரது இஜ்தி ஹாதின் சிறப்பம்சமாகும்.
கர்ளாவியைப் பொறுத்தவரை ஒவ்வொரு சட்ட அறிஞனும் தனித்து இயங் காமல் கூட்டு இஜ்திஹாத் மேற்கொள்வது மிகப் பயனுள்ளதாகவும் பொருத் தமானதாகவும் இருக்கும் எனக் கருதுகின்றார். இத்துறையில் அவர் எழுதிய அல் இஜ்திஹாத் பீ ஷரீஆ இஸ்லாமிய்யா’ என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி எனலாம். கர்ளாவியின் இஜ்திஹாத் அடிப்படையைப் பற்றி விரி வாக ஆராயலாம். இங்கு இவ்விடயம் சுருக்கமாகவே தரப்பட்டுள்ளது என்ப தைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை ஒரு பாடத்திட்டமாக கற்கும் எந்த ஒரு மாணவனுக்கும் கர்ளாவி என்பவரை தெரியாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு அவரது சிந்தனை வீச்சும் பார்வைப் பரப்பும் மிக விரிந்தவை. இத்தகைய மகத்தான மனிதர்களின் ஆயுளை அல்லாஹ் இன்னும் பல்லாண்டு நீடித்து வைக்க நாம் பிரார்த்திப்போமாக.
றவூப் ஸெய்ன்

இஸ்லாத்தில் குடும்பம்

Best Blogger Tips

இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செய்யப்படுகின்ற அருள்மிக்க ஒப்பந்தமாகும். அதன் மூலமாகவே இருவரில் ஒருவர்
மற்றவருக்கு ஆகுமாக்கப்படுவதன் காரணமாக நீண்ட ஒரு வாழ்க் கைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
இதன்காரணமாக ஒருவருக் கொருவர் நேசம் கொண்டவர்களாகவும்அன்பு கொண்டவர்க ளாகவும் புரிந்துணர்வுஉதவி,ஒத்தாசை கொண்டவர்களாகவும் ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும்

Text Widget

Text Widget